திருப்பூர்:வெளிநாட்டு தபால் சேவைக்கான புதிய கட்டண முறையை தபால் இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.தபால்துறை வாயிலாக வெளிநாடுகளுக்கு தனிப்பட்ட மற்றும் வணிக நோக்க முடைய தபால்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான், வங்கதேசம், பாகிஸ்தான் உட்பட, 102 நாடுகள், கண்டங்கள், துணைக்கண்டங்களுக்கான, கோப்புகள் மற்றும் வணிகப்பொருட்களுக்கான விரைவு தபால் கட்டணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.முதல், 250 கிராமுக்கு, குறைந்தபட்சம் 670 முதல், 3,660 ரூபாய் வரை, நாடுகளுக்கேற்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 250 கிராமுக்கு மேல், இந்த விலை உயரும். 'ஏர் பார்சல்' முதல் 250 கிராமுக்கு, 450 முதல், 1,460 ரூபாய் வரை, 213 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தபால்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE