ஒட்டன்சத்திரம்: தங்கச்சியம்மாபட்டி சடையன்குளம் இந்த ஆண்டாவது நிரம்பி சாகுபடி சிறக்க வழிபிறக்க வேண்டும்.ஒட்டன்சத்திரம் அருகே தங்கச்சியம்மாபட்டியில், தாலுகாவில் பெரிய குளமான சடையன்குளம் உள்ளது. கடந்த ஆண்டு தன்னார்வ அமைப்புகளால் நீர் வரத்துக் கால்வாய் துார்வாரப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக காட்டாற்று வெள்ளம் தங்குதடையின்றி குளத்திற்கு சென்றது.இதனால் குளத்தில் சிறிதளவு தண்ணீர் காணப்படுகிறது. குளம் நிரம்பினால் சுற்றியுள்ள நுாற்றுக்கணக்கான நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், பல ஊராட்சிகளின் குடிநீர் தேவையும் பூர்த்தியாகும். பரப்பலாறு அணையில் திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு குளம் நிரம்பி வந்தது.சில ஆண்டுகளாக மழையின்றி, அணையில் தண்ணீர் திறந்து விடாததால் குளம் வறண்டு கிடக்கிறது. எனவே, இந்தாண்டாவது பரப்பலாறு அணை நிரம்பி, உபரி நீர் திறக்கப்பட்டால் சடையன்குளமும் நிரம்ப வழி பிறக்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE