கோவை:விற்பனைக்காக ஆறு கிலோ புகையிலைப் பொருட்களை மறைத்து வைத்திருந்த நபரை, போலீசார் கைது செய்தனர்.கோவை உப்பார வீதியில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக, வெரைட்டிஹால் ரோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்ற போலீசார், கோவை உப்பார வீதியை சேர்ந்த மதன்சிங், 24 என்பவருக்கு சொந்தமான மம்தா ஸ்டோர் என்ற கடையில், 554 பாக்கெட்டுகள் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், பதுக்கி வைத்திருப்பதை கண்டறிந்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார், மதன்சிங்கை கைது செய்தனர். ஆறு கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE