கடலுார்:கடலுார் மாவட்டம், பால்வாத்துண்ணான் கிராமத்தைச் சேர்ந்த ராயர் மகள்
தர்னிஷா, 12. இவர், சக தோழியரான சகோதரிகள், சபிதா, 14; மகாலட்சுமி, 10 மற்றும் ஷர்மிளா, 14, ஆகியோருடன் நேற்று, அங்குள்ள வாய்க்காலில் குளித்தார்.
திடீரென, நால்வரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அலறல் கேட்டு, அருகில் இருந்தவர்கள், சபிதா, ஷர்மிளாவை காப்பாற்றினர். தர்னிஷா, மகாலட்சுமி நீரில் மூழ்கினர். ஒரு மணி நேரத்திற்கு பின், உடல்கள் மீட்கப்பட்டன.கடந்த, 2002ல் ராயரின்மகள்கள் திவ்யா, 5; ஆர்த்தி, 2; ஆகியோர் கடம்பமரம் குளத்தில் மூழ்கி இறந்தனர். மற்றொரு மகள் தர்னிஷா, நேற்று இறந்தார். ஒரே குடும்பத்தில், மூன்று சிறுமியர் தண்ணீரில் மூழ்கி இறந்தது, அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE