கூடலுார்:குமுளி வழியாக கேரளா செல்பவர்களுக்கு 'இ பாஸ்' சில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஏலத்தோட்ட தொழிலாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை.
குமுளி வழியாக கேரளா செல்பவர்களுக்கு 'இ பாஸ்' கட்டாயம். மார்ச்சில் இருந்து ஜூலை வரை பாஸ் பெற்று சென்ற அனைவரும் கொரோனா பரிசோதனை செய்தபின் அனுமதிக்கப் பட்டனர். அதன்பின் காய்ச்சல் பரிசோதனை மட்டும் செய்யப்பட்டது. 2 மாதங்களாக இடுக்கி மாவட்ட ஏலத்தோட்ட தொழிலாளர்கள் உட்பட அனைவருக்கும் பாஸ் நம்பரை குறித்துக் கொண்டு டோக்கன் வழங்கப்பட்டது. இதனால் காலதாமதம் ஏற்பட்டு தொழிலாளர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சிரமப்பட்டனர்.
நேற்று முதல் 'இ பாஸ்'சில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. குமுளியில் முகாமிட்டு இருந்த சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினர் விலக்கிகொள்ளப்பட்டனர். எல்லையில் உள்ள போலீசாரிடம் இ பாஸை மட்டும் காட்டி விட்டு செல்லலாம் என அறிவிக்கப்பட்டதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE