திருநெல்வேலி:கடையம் அருகே நிலத்தகராறில் தந்தையை மகன் வெட்டிக்கொலை செய்த மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் கடையத்தை சேர்ந்தவர் தங்கராஜா 70. இவருக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவியின் மகன் திருக்குமரன் 42. அவருக்கு பிரித்துக்கொடுத்த நிலத்திற்கு நடைபாதையில்லை. இதனால் தந்தை, மகனுக்கு இடையே தகராறு இருந்தது. நேற்று மாலை 4:30க்கு வயலுக்கு சென்ற திருக்குமரன், தங்கராஜாவை வெட்டியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். கடையம் போலீசார் திருக்குமரனை தேடிவருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE