திருப்பூர்:திருப்பூரில் இருந்து சேலம் வழியாக திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் பஸ்களில் கூட்டம் குறைந்துள்ளது.தீபத்திருநாள் என்றாலே திருவண்ணாமலைக்கு பக்தர்கள் அதிகளவில் செல்வர். குறிப்பாக, பவுர்ணமி நாளில் கிரிவலப் பாதையில் நடக்க பக்தர்கள் ஆர்வம் காட்டுவர்.நடப்பாண்டு கொரோனா ஊரடங்கால், திருக்கார்த்திகை தீப விழா எளிமையாக நடத்தப்படுகிறது. பொதுமக்கள் பங்கேற்க, மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. இன்றும், நாளையும் சிறப்பு பஸ் இயக்கம் நிறுத்தப்படுகிறது.இதனால், திருப்பூரில் இருந்து சேலம், செங்கம், ஊத்தங்கரை வழியாக திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் வழக்கமான பஸ்களில் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.திருப்பூரில் இருந்து புறப்படும் ஆறு பஸ்களில் எதிர்பார்த்த கூட்டமில்லை. பஸ்சுக்கு, 30 பயணிகள் மட்டுமே பயணித்தனர்.போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில்,' கடந்தாண்டு பஸ்சுக்கு, 70 முதல், 80 பேர் பயணித்தனர். முன்பதிவும் இருந்தது. நடப்பாண்டு கொரோனாவால் கோவிலுக்கு வர வேண்டாம் என உத்தரவிட்டுள்ளதால், திருவண்ணாமலைக்கு பஸ்களில் எதிர்பார்த்த கூட்டமில்லை,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE