திருப்பூர்:இயல்பு வாழ்க்கை பாதிக்கும் என்பதால், மதுக்கடை அமைக்கும் முயற்சியை தடுக்க வேண்டுமென, இடுவம்பாளையம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.அப்பகுதி மக்கள், கலெக்டரிடம் அளித்த மனுவில்,'முருகம்பாளையம் மெயின் ரோடு பகுதியில், ஊரின் மத்தியில் புதிய மதுக்கடை அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. அதிக மதுக்கடை பார் இயங்கி வருவதால், மக்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கோவில், பள்ளிகள், வீடுகள் இருப்பதால், புதிய மதுக்கடை அமைக்கும் முயற்சியை தடுக்க வேண்டும்,' என்று தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE