கோவை:கோவையில் கொரோனா குணமான, 82 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
மாவட்டத்தில் நேற்று புதிதாக, 145 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. மொத்த பாதிப்பு, 48 ஆயிரத்து 279 ஆக உயர்ந்தது. கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரு முதியவர்கள் நேற்று இறந்தனர். மொத்த பலி எண்ணிக்கை, 607 ஆக உயர்ந்துள்ளது.
அரசு மருத்துவமனை இ.எஸ்.ஐ., மற்றும் தனியார் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 82 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 46 ஆயிரத்து 931 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 741 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE