பாலக்காடு:பாலக்காடு அருகே, பஸ்சும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
பட்டாம்பி சூரக்கோட்டை சேர்ந்த பெண் சஜி 52, வல்லப்புழாவை சேர்ந்த ராஜகோபால் 63 மற்றும் சிலர், ரஷீத் என்பவரின் ஆட்டோவில் பட்டாம்பி சென்றுக்கொண்டிருந்தனர். கரிம்புள்ளி என்னுமிடத்தில் சென்றபோது திடீரென நாய் குறுக்கே பாய்ந்ததால், ஆட்டோ கட்டுப்பாடு இழந்து, எதிரே வந்த பஸ் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சஜி மற்றும் ராஜகோபால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர். டிரைவர் ரஷீத் உட்பட இருவர் காயமடைந்தனர்.பட்டாம்பி போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE