கூடலுார்:முதுமலையில், தடைசெய்யப்பட்ட வனப்பகுதிக்குள் சென்ற கேரளாவை சேர்ந்த நான்கு சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், மாயார் சாலையை ஒட்டிய தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள், சுற்றுலாப்பயணிகள் செல்வதாக தகவல் கிடைத்தது. மசினகுடி வனச்சரகர் மாரியப்பன், வனக்காப்பாளர் சங்கர் ஆய்வு செய்தனர்.அப்போது, நான்கு சுற்றுலா பயணிகள், தாங்கள் வந்த காரை, சாலையோரம் நிறுத்திவிட்டு, தடைசெய்யப்பட்ட வனப்பகுதிக்கு சென்றது தெரியவந்தது.
அவர்களை வனத்துறையினர் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர்.விசாரணையில், அவர்கள் கேரளா எர்ணாகுளத்தை சேர்ந்த சிஜூ, 48, மது, 40, சாம்குமார், 46, சுனில், 40, என, தெரிய வந்தது. முதுமலை துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் உத்தரவுபடி தலா, 10 ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம் 40 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE