திருப்பூர்:கோவை - மும்பை குர்லா எக்ஸ்பிரஸ் இயக்கத்துக்கு தெற்கு ரயில்வே அனுமதி அளித்தது.
கொரோனா, ஊரடங்கால் மார்ச், 24 முதல் கோவை - மும்பை ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ஏப்., முதல் நவ., வரை எட்டு மாதமாக இந்த ரயில் இயங்கவில்லை. டிச., 1 ம் தேதி முதல் இயங்க, தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது.மும்பையில் இருந்து வரும், 1ம் தேதி கோவைக்கு குர்லா எக்ஸ்பிரஸ் புறப்படுகிறது. 3ம் தேதி கோவையில் இருந்து மும்பைக்கு ரயில் புறப்படுகிறது.
இந்த ரயிலுக்கான முன்பதிவு ரயில் பயணிக்கும் ஸ்டேஷன்களில் துவங்கியுள்ளது.கேரளாவில் இருந்து டில்லி, கவுகாத்தி, பாட்னா உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கம் துவங்கி இரு மாதமாகிய நிலையில், கோவையில் இருந்து வடமாநில ரயில் இயக்கத்துக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. தற்போது, மகாராஷ்டிரா மாநிலம், மும்பைக்கு சிறப்பு ரயில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE