அன்னுார்:தமிழக அனைத்து பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம், அன்னுாரில் நேற்று நடந்தது. அரசு, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், பகுதி நேரமாக, ஓவியம், உடற்கல்வி, இசை, கம்ப்யூட்டர் ஆகிய பணிகளில் தொகுப்பூதியமாக, 7,700 ரூபாய் பெற்று, ஒன்பது ஆண்டுகளாக பணிபுரிந்து வரும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர சிறப்பாசிரியர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும், என, அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.திருப்பூர் மாவட்ட தலைவர் சரவண ராஜ் பேசுகையில், ''ஒன்பது ஆண்டுகள் பணிபுரிந்தும், பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.அன்னுார், எஸ்.எஸ்.குளம், காரமடை, பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியங்களை சேர்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பங்கேற்றனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் மாலதி தலைமை வகித்தார். செயலாளர் ஜெய்கணேஷ் வரவேற்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE