மதுரை: மதுரையில் வைகை ஆற்றை அபகரித்த ஆகாயத்தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் சமீபத்தில் மழை பெய்தது. ஆங்காங்கே இருந்த ஓடை, தாழ்வான பகுதிகள் வழியாக வைகை ஆற்றுக்குள் தண்ணீர் புகுந்தது.
இதனால் ஆற்றில் சிறிதளவு நீர் வரத்து ஏற்பட்டது. ஆற்றில் பல்வேறு இடங்களில் தேங்கி நின்ற ஆகாயத்தாமரைகளை இந்நீர் அடித்து வந்தது. அனைத்தும் மதுரை கல்பாலத்திற்கு மேற்கு பகுதியில் குவிந்து கிடக்கின்றன. அடைக்கலம் தேடி கொசு, விஷப்பூச்சிகள் முகாமிட்டுள்ளன. துர்நாற்றமும் வீசுகிறது. தரைப்பாலம் வழியாக செல்வோர் நாற்றத்தை கடந்து தான் செல்ல வேண்டும். நோய் பரவும் வாய்ப்பும் இருக்கிறது. ஒரு வாரமாக இவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. வைகை நதி மக்கள் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறுகையில், 'மழைக்காலத்தில் அடித்து வரப்படும் ஆகாயத்தாமரையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதே இல்லை. அதிகளவு நீர் திறந்தாலோ, வெள்ளம் வந்தாலோ அடைப்பு ஏற்பட்டு கல்பாலம் மூழ்கும்.இதனால் விபத்து நேரிடலாம். உடனடியாக அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE