திருமங்கலம்: மதுரை பைக்கரா அரசினர் காலனியைச் சேர்ந்தவர் சலீம் மகன் அஷ்ரவ் 20, இவர் மூலக்கரை அருகே உள்ள தனியார் கல்லுாரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். திருமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் தனது நண்பர் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த சுந்தரேஸ்வரனுடன் சென்று திரும்பினார். கப்பலுார் காலனி அருகே ரோட்டின் குறுக்கை வந்த மாடு மீது இருசக்கர வாகனம் மோதியதில் துாக்கியவீசப்பட்ட அஷ்ரவ் சம்பவ இடத்திலேயே பலியானார். சுந்தரேஸ்வரன் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். மாட்டிற்கு கால்கள் உடைந்தன. திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE