சென்னிமலை: கருமாண்டிசெல்லிபாளையம், பெருந்துறை பேரூராட்சி மக்களுக்கு, மனுநீதி நாள் திட்ட முகாம் நடந்தது. பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் முன்னிலை வகித்தார். கலெக்டர் கதிரவன் தலைமை வகித்தார். மொத்தம், 256 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. தொடர்புடைய அலுவலர்களிடம் நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார். முகாமில், பல்வேறு திட்டங்கள் மூலம், 42 பயனாளிகளுக்கு, ஆறு லட்சத்து, 52 ஆயிரம் ரூபாய் மதிப்பில், அரசு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE