ஈரோடு: நிர்வாக வசதி, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஈரோடு மாவட்டத்தில் ஓட்டு எண்ணும் மையத்தை மூன்றாக உயர்த்த உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளின் ஓட்டு எண்ணிக்கை, சித்தோடு ஐ.ஆர்.டி.டி., பொறியியல் கல்லூரி, கோபி கலை அறிவியல் கல்லூரி என இரு மையங்களில், வழக்கமாக எண்ணப்படுகிறது. நடப்பாண்டு நிர்வாக வசதிக்காக, ஓட்டு எண்ணிக்கையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மையத்தை மூன்றாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: வழக்கமாக உள்ள இரு ஓட்டும் எண்ணும் மையங்களுடன், ஓட்டு எண்ணிக்கை நடத்துவதற்கான கட்டமைப்பு வசதி உள்ளதா என, ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த அறிக்கை, தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், பீஹார் தேர்தலில், ஓட்டு எண்ணிக்கை மறுதினம் வரை நீடித்த நிலையில், ஓட்டு எண்ணும் மையத்தை அதிகரிப்பதால், விரைவாக நிறைவு செய்ய வாய்ப்பாக அமையுமென, தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE