ஈரோடு: ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில், அரசுப்பள்ளியில் படித்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, தமிழக அரசின், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், மருத்துவ கல்லூரியில் சேர்ந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட, மிகவும் பின் தங்கிய மற்றும் பிற்பட்ட வகுப்பை சார்ந்த நான்கு மாணவ, மாணவியருக்கு, தலா, 25 ஆயிரம் ரூபாய், கல்வி உதவித்தொகையை, சக்திதேவி அறக்கட்டளை அறங்காவலர்கள் துரைசாமி, சாந்தி துரைசாமி வழங்கினர். இதில் வழிகாட்டி திட்ட ஆலோசகர் ராஜமாணிக்கம், பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் அருள்குமார், வேளாண் அறிவியல் ஆசிரியர் கந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE