கெங்கவல்லி: நடப்பாண்டில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி, கடந்த, 19 முதல், டிச., 10 வரை நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கெங்கவல்லி ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த கல்வி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுஜாதா(பொ) தலைமையில் ஆசிரியர்கள், ஒன்றியத்திலுள்ள, 60க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிளுக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில், வீடுதோறும் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். பல்வேறு சூழலால், பள்ளி படிப்பை தொடர முடியாத குழந்தைகள், பள்ளிகளில் சேராமல் இருக்கும் பிள்ளைகள் குறித்து, கணக்கெடுப்பு பணி நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE