சேலம்: சேலம் மாவட்டத்தில், புதிதாக, 76 பேருக்கு, கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. சேலம் அரசு மருத்துவமனை, கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர்களில், இரு பெண்கள், இரு ஆண்கள் குணமாகி, நேற்று, வீடு திரும்பினர். புதிதாக, சேலத்தில் ஒரேநாளில், 76 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதன்படி, சேலம் மாநகராட்சியில், 40 பேர், இடைப்பாடி, நங்கவள்ளி, ஓமலூர், தலா, 4, மேட்டூர் நகராட்சி, சேலம் ஒன்றியம், வீரபாண்டி, தலா, 3, ஆத்தூர், அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, நரசிங்கபுரம் நகராட்சி, தலா, 2, மகுடஞ்சாவடி, தலைவாசல், கொளத்தூர், மேச்சேரி, தாரமங்கலம், பனமரத்துப்பட்டி, ஆத்தூர் நகராட்சி, தலா ஒருவர் என, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர், 76 பேர். இவர்களுடன் சேர்த்து, இதுவரை சேலத்தில், 29 ஆயிரத்து, 648 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 437 பேர் உயிரிழந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE