மேட்டூர்: மேட்டூர் அணை நீர்திறப்பு குறைக்கப்பட்டதால், கதவணை மின் நிலையங்களில் மின்உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணை முதல், கரூர் வரை, காவிரி குறுக்கே, செக்கானூர், நெருஞ்சிப்பேட்டை, குதிரைக்கல்மேடு உள்பட, ஏழு இடங்களில், கதவணை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், தலா, 30 மெகாவாட் அதிகபட்சமாக உற்பத்தி செய்யலாம். 'நிவர்' புயலால், டெல்டா பாசன நீர் தேவை குறைந்தது. இதனால், கடந்த, 24 முதல், குடிநீர் தேவைக்கு மட்டும், காவிரியாற்றில் வினாடிக்கு, 500 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இந்த நீர், கரையோர மாவட்ட குடிநீர் தேவைக்கு தொடர்ச்சியாக செல்ல வேண்டும். இதில், மின்உற்பத்தி செய்ய முடியாது என்பதால், கதவணை மின் நிலையங்களில் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE