தர்மபுரி: தர்மபுரி அடுத்த அன்னசாகரம், அங்காளம்மன் தாண்டேஸ்வரர் கோவிலில், நேற்று சுவாமிக்கு கண் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. தர்மபுரி அடுத்த அன்னசாகரம் தண்டுபாதை தெருவில், அங்காளம்மன் தாண்டேஸ்வரர் சுவாமி கோவில் புதியதாக கட்டப்பட்டது. நேற்று காலை, 6:00 மணிக்கு, கணபதி ஹாமம் மற்றும் யாகசாலை பூஜை நடந்தது.? தொடர்ந்து, சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர், குங்குமம் உள்ளிட்ட, 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின், காலை, 8:00 மணிக்கு, அங்காளம்மன் தாண்டேஸ்வரர் சுவாமிகளுக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடந்தது. காலை, 9:00 மணிக்கு, சுவாமிக்கு கண் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, சுவாமி திருவீதி உலா நடந்தது. நிகழ்ச்சியில் அன்னசாகரத்தை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, ஊர்மக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE