தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் மூன்று பெண்கள் உள்பட மொத்தம், ஏழு பேர் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தர்மபுரி மாவட்டத்தில், பாப்பிரெட்டிபட்டியை சேர்ந்த, 60 வயது பெண்; அரூர் மேல்பாஷாபேட்டையை சேர்ந்த, 29 வயது பெண்; பிக்கிலியை சேர்ந்த, 49 பெண் ஆகிய மூவர் நேற்று கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல், பிடமனேரியை சேர்ந்த, 53 மற்றும் 31 வயது ஆண்கள்; நல்லம்பள்ளியை சேர்ந்த, 38 வயது ஆண், பழைய தர்மபுரியை அடுத்த முத்துப்பட்டியை சேர்ந்த, 39 வயது ஆண் என மொத்தம் ஏழு பேர் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள, கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அதன்படி, மாவட்டத்தில் நேற்று வரை, 6,035 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில், 5,842 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இதுவரை, 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE