கிருஷ்ணகிரி: மேட்டூர் குட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ரவிராகுல், 23; இவர், ஓசூர் டைட்டான் வாட்ச் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த, 25ல் ஓசூரிலிருந்து, தன் சொந்த ஊருக்கு பஜாஜ் பல்சர் பைக்கில் சென்றார். இரவு, 9:30 மணிக்கு கிருஷ்ணகிரி - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பட்டணம் அடுத்த, பையூர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, முன்னால் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் திடீர் பிரேக் போட்டதால், அந்த வாகனத்தின் பின்புறம் அவர் மோதியுள்ளார். இதில், நிலைதடுமாறி கீழே விழுந்தவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து, காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE