கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, டி.ஆர்.ஓ.,வாக சதீஷ், நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். கிருஷ்ணகிரி, டி.ஆர்.ஓ.,வாக பணியாற்றி வந்த சாந்தி, தேசிய நெடுஞ்சாலை பெங்களூரு செயற்கைகோள் நகர்புற வளைவு சாலை (நில எடுப்பு) தனி மாவட்ட வருவாய் அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, சேலம் மாநகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்த சதீஷ், கிருஷ்ணகிரி, டி.ஆர்.ஓ.,வாக நியமிக்கப்பட்டார். இவர் கடந்த, 2009ல், டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் முதல் குரூப்பில் தேர்ச்சி பெற்று, திருவள்ளூர் துணை கலெக்டராக (பயிற்சி) பணியில் சேர்ந்தார். 2010ல் கிருஷ்ணகிரியிலும், 2012ல், சேலம் மாவட்ட ஆர்.டி.ஓ.,வாகவும் பணியாற்றினர். 2014ல் ஈரோடு டி.ஆர்.ஓ.,வாகவும், 2017ல் சேலம் மாநகராட்சி கமிஷனராகவும் பொறுப்பு வகித்தார். இவர், கிருஷ்ணகிரி மாவட்டத்தின், 10வது டி.ஆர்.ஓ.,வாக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக, கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டியை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதேபோல், நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலராக சாந்தி, பொறுப்பேற்றுக் கொண்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE