வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கல்லறை பகுதியை சேர்ந்தவர் ரவி, 55; தச்சுத் தொழிலாளி. இவரது மகன், ரித்திக், 12, அங்குள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் வீடு, பாலாற்று கரையோரம் உள்ளது. நேற்று மதியம், 1:00 மணிக்கு நண்பர்களுடன் பாலாற்றில் இறங்கி, ரித்திக் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென ஆற்றில் அதிகளவு தண்ணீர் வந்தது. இதில், ரித்திக் அடித்துச் செல்லப்பட்டார். அங்கிருந்தவர்கள், ஆற்றில் ஒரு கி.மீ., தூரம் நீந்திச்சென்று, மயங்கிய நிலையில் இருந்த அவரை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். வாணியம்பாடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE