நாமக்கல்: மங்களபுரத்திற்கு ஆம்புலன்ஸ் வசதி கோரி, கலெக்டரிடம், இந்திய மாணவர் சங்க மாவட்டக்குழு சார்பில் மனு கொடுக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட மங்களபுரம் கிராம பஞ்., மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மங்களபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், 10 ஆண்டுகளாக, '108' ஆம்புலன்ஸ் செயல்பட்டு வந்தது. தற்போது, ஓராண்டாக ஆம்புலன்ஸ் வாகனம் செயல்படாமல் உள்ளது. மேல்சிகிச்சைக்கு, 30 கி.மீ., தொலைவிலுள்ள ராசிபுரம், 25 கி.மீ., தொலைவிலுள்ள ஆத்தூருக்கு செல்ல வேண்டியுள்ளது. தனியார் ஆம்புலன்ஸ் அதிக வாடகை வசூலிக்கின்றனர். இங்கு வசிப்பவர்கள் விவசாயம் சார்ந்த ஏழை மக்கள். எனவே, அவசர ஊர்தியான, '108' அம்புலன்சை மீண்டும், மங்களபுரம் பகுதியில் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE