ராசிபுரம்: அரசு இட ஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்த மாணவருக்கு பள்ளி ஆசிரியர்கள் நிதியுதவி அளித்தனர். ராசிபுரம் அடுத்த, ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவன் ரேணுகுமாருக்கு, தமிழக அரசின், 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டில் கோவை தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது. இதையடுத்து, மாணவரை ஆசிரியர்கள் பாராட்டினர். தொடர்ந்து, ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் மாணவரின் கல்லூரி செலவுக்காக, 70 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் ஆண்ட்ரூஸ், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராதா சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE