குமாரபாளையம்: குமாரபாளையத்தில், மோட்டார் மூலம் வடிகால் பணியாளர்கள் மழைநீரை வெளியேற்றினர். குமாரபாளையத்தில், சேலம் சாலையில், 14 கோடி ரூபாய் மதிப்பில் இருபுறமும் இரு கி.மீ., தூரத்திற்கு வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. வடிகாலுக்காக பொக்லைன் மூலம் தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் அதிகம் தேங்கியதால் பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால், மோட்டார் வைத்து மழைநீரை வடிகால் பணியாளர்கள் வெளியேற்றினர். நேற்று மாலை வரை நீரை வெளியேற்றும் பணி நடந்தது. ஈர நிலத்தில் கான்கிரீட் கலவை கொட்ட முடியாத நிலை ஏற்பட்டது. ஏற்கனவே, பணிகள் தாமதம் என பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் புகார் கூறி வரும் வேளையில் இது போன்ற இயற்கை பேரிடராலும் தாமதமாகி வருவது வியாபாரிகளை கவலையடைய வைத்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE