பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் மழை தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் சுகாதார பணிகளை மேற்கொள்ள, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்மழையால், பள்ளிபாளையத்தில் சாலை, குடியிருப்பு மற்றும் வடிகால் பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் கொசு உற்பத்தி, சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தண்ணீர் தேங்கியுள்ள இடங்களை கண்டறிந்து, கொசு மருந்து தெளித்தல், சுண்ணாம்பு, பிளிச்சீங் பவுடர் போடுதல், போன்ற சுகாதார பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE