கிருஷ்ணராயபுரம்: மாயனூர் காவிரி ஆற்றில் குறைந்த தண்ணீர் திறக்கப்பட்டதால், மீன் பிடிக்கும் பணி தீவிரமாக நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனூர் காவிரி ஆற்றில் கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த தண்ணீரில் வரும் மீன்களை பிடிக்க மாயனூர் மீனவர்கள் பரிசலில் செல்கின்றனர். தற்போது குறைந்தளவு தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரில் மீன்கள் கிடைத்து வருகிறது. இதனால் மீன் விலை சற்று குறைந்துள்ளது. நேற்று, ஜிலேபி மீன்கள், கிலோ, 120 ரூபாய்க்கு விற்பனையானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE