கரூர்: கரூர் மாவட்டத்தில் நேற்று, நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று, உறுதி செய் யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை, 4,748 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில், 4,760 பேர் சிகிச்சைக்கு பிறகு, பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 197 பேர் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று புதிதாக கரூர் தொழிற்பேட்டை, கடவூர் விராலிபட்டி, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, நான்கு பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. இவர்கள் அனைவரும், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில், இதுவரை, 47 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE