கராகஸ்: தென் அமெரிக்க நாடான வெனிசுலா அரசின் எண்ணெய் நிறுவனத்தால் நிர்வகிக்கப் படும், 'சிட்கோ' என்ற சுத்திகரிப்பு தொழிற்சாலை, அமெரிக்காவில் இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றி வந்த ஆறு பேர், மூன்று ஆண்டுகளுக்கு முன், வேலை காரணங்களுக்காக வெனிசுலாவிற்கு வந்தனர். பின், ஊழல் குற்றச்சாட்டுகளில், அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில், நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. குற்றஞ்சாட்டப்பட்ட அமெரிக்கர்கள், ஆறு பேரையும், குற்றவாளிகள் என தீர்ப்பளித்து, அவர்களை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE