புதுடில்லி: விவசாயிகள் பிரச்னை தீவிரம் அடைந்து வரும் நிலையில் மூன்று மத்தியஅமைச்சர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
![]()
|
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநில விவசாயிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் டில்லிக்குள் நுழைய முயற்சிக்கும் அவர்கள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்படுகின்றனர். இருப்பினும் விவசாயிகள் அங்கு நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டத்திற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் விவசாயிகளிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார். அதில் விவசாயிகள் அரசு குறிப்பிடும் மைதானத்திற்குசென்று போராட்டம் நடத்தினால் வரும் 3 -ம் தேதிக்கு முன்னதாக பேச்சுவார்த்தை நடத்தும் போராட்டத்திற்கு போலீசாரின் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்து இருந்தார். அமைச்சர் அமித்ஷாவின் கோரிக்கையை புறந்தள்ளிய விவசாயிகள் மசோதாவை வாபஸ் பெறும் வரையில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.
![]()
|
இந்நிலையில் விவசாயிகளி்ன் பிரச்னை குறித்து மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா மற்றும் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் விவாதித்து வருகின்றனர். இவர்களுடன் பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.,நட்டாவும் கலந்துகொண்டுள்ளார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement