ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் டிச.,01 முதல் 31 வரை இரவு நேர ஊரடங்கு அமலாக உள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அம்மாநிலத்தின் 8 மாவட்ட தலைநகரங்கள் மற்றும் சில இடங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோட்டா, ஜெய்ப்பூர், ஜோத்பூர், பிகானீர், உதய்பூர், பில்வாரா, நாகோரே, பாலி, தோன்க், சிகார் மற்றும் கங்காநகர் உள்ளிட்ட நகரங்களில் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

டிச.,01ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கின் போது சமூக அரசியல், விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்வுகளுக்கு அனுமதி இல்லை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE