சென்னை: தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு டிச.31 வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை. இதனால் பள்ளிகள் டிசம்பர் வரை மூடியே இருக்கும் என தெரிகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 5 மாதங்களுக்குப்பின் சில தளர்வுகளுடன் மத்திய , மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு தொடர்பாக நேற்று முதல்வர் பழனிசாமி மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்கு பின்னர் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;
01. டிச.31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடரும்.
02. டிச.7 முதல் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் துவங்கும்.
03. டிச.7 முதல் மருத்துவம், மருத்துவம் சார்ந்த கல்லூரி இள நிலை மாணவர்களுக்கு திறக்கப்படும்.
04. டிச.14 முதல் மெரினா கடற்கரை திறக்கப்படும்.
05. நீச்சல் குளத்தில் பயிற்சிக்காக திறக்கலாம்.
06. சுற்றுலா தலங்களில் வழிகாட்டுமுறைகளுடன் அனுமதி.

07. டிச.1 முதல் மத, அரசியல், பொழுதுபோக்கு கூட்டங்களுக்கு அனுமதி. உள் அரங்க கூட்டத்தில் 200 பேர் வரை பங்கேற்கலாம். முறையான காவல்துறை அனுமதி பெற வேண்டும்.
08. வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு இப்பதிவு முறை தொடர்ந்து அமலில் இருக்கும்.
09. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகள் இல்லை.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE