ஐதராபாத்: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்தும் போராட்டம் அரசியல் நோக்கம் கொண்டது அல்ல என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களை வாபஸ் பெற கோரி பல மாநில விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதன் ஒரு பகுதியாக பஞ்சாப், ஹரியானா விவசாயிகள், கடந்த 26ம் தேதி காலை டில்லி நோக்கி ‛டில்லி சாலோ' பேரணியை துவக்கினர். இதற்காக விவசாயிகள், லாரிகள், டிராக்டர்கள் மற்றும் கால்நடையாக நடந்து, பல குழுக்களாக பிரிந்து பேரணியில் கலந்து கொண்டனர். எனினும் இந்த பேரணி அரசியல் உள்நோக்கம் கொண்டது என சிலரால் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேளாண் சட்டத்திற்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் அரசியல் நோக்கம் கொண்டது என்று ஒருபோதும் கூறியதில்லை, அப்படி கூறவும் மாட்டேன். விவசாய அமைப்புகளுடன் வருகிற டிசம்பர் 3ம் தேதி மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தும். விவசாயிகளின் ஒவ்வொரு பிரச்னையையும், கோரிக்கையையும் பற்றி பேச அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE