குடியாத்தம் : வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே, மோர்த்தானா அணை, 'நிவர்' புயல் மழையால், நிரம்பி வழிகிறது.
அணையில் இருந்து வினாடிக்கு, 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. குடியாத்தம் போடிபேட்டையை சேர்ந்த யுவராஜ் மனைவி நதியா, 31; இவர்களது இரு குழந்தைகள், நிவிதா, 11, அஸ்வினி, 8.நேற்று மதியம், 3:30 மணிக்கு, கவுண்டன்ய மகாநதியில் ஏற்பட்ட வெள்ளத்தை பார்க்கும் ஆசையில், நதியா, தன் இரு குழந்தைகளை அழைத்துச் சென்றார். கூடவே, அவர்கள் வளர்த்த இரண்டு நாய்களும் சென்றன.அவர்கள், ஆற்றில் இறங்கி, வேடிக்கை பார்த்தபோது, திடீரென அதிக நீர்வரத்தால், மூவரும் அடித்துச் செல்லப்பட்டனர். குடியாத்தம் தீயணைப்பு வீரர்கள், ஒரு கி.மீ., துாரத்தில், மூவரது சடலத்தையும் மீட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE