ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 13கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இரண்டு பெண்கள் உட்பட 19 பேரை கைது செய்தனர்.
நேற்று ராமநாதபுரத்தில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மூன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து வாலாந்தரவை ஷியாம் சுந்தர் 28, ராமநாதபுரம் வசந்தா நகர் உதய பிரகாஷ் 21, வாலாந்தரவை தேவர் நகர் உதய குமார் 21, ராமநாதபுரம் ஓம்சக்தி நகர் மார்க் மிக்கேல் சாமராஜ் 21 ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.கமுதியில் கே.வேப்பன்குளம் வில்லம்மாள் 46, பாண்டியம்மாள் 53, பத்மேஸ்வரன் 22, கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 1150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டது.இதே போல் பரமக்குடி, கீழக்கரை, முதுகுளத்துாரில் மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த 8 கிலோ 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE