திருப்புல்லாணி : திருப்புல்லாணி யூனியன் அலுவலகத்தில் பிரதமர் மோடி படத்தை வைக்க யூனியன் நிர்வாகம் முன்வரவேண்டும் என பா.ஜ.,வினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பா.ஜ., அமைப்புசாரா பிரிவு தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார் கூறியதாவது:அரசு அலுவலகங்களில் பிரதமரின் படத்தை வைப்பது குறித்த அரசாணை உள்ளது. இதுவரை பின்பற்றப்படாத அரசு அலுவலகங்களில் கோரிக்கையை முன்னிறுத்தி, மனு அளிக்க உள்ளோம்.திருப்புல்லாணி யூனியன் அலுவலகத்தில் பிரதமர் படம் இடம்பெற செய்ய அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE