ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் இளைஞரை குத்தி கொலை செய்த வழக்கில் போலீசார் தேடி வந்த இருவர் கோவை போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகினர்.
ராமேஸ்வரம் சந்தனமாரியம்மன் கோயில் தெரு சேர்ந்த மனோஜ்24, இவரை நவ.,20ல் சிலர் கத்தியால் குத்தி கொலை செய்து, தப்பினர்.ராமேஸ்வரம் கோயில் போலீசார், கொலையாளியை தேடி வந்தனர்.இந்நிலையில் 10 நாட்களுக்கு பின் நேற்று கோவை சாய்பாபா காலனி போலீஸ் ஸ்டேஷனில், இவ்வழக்கில் தொடர்புடைய ராமேஸ்வரம் புலித்தேவன் நகர், கரையூர் சேர்ந்த முருகநாதன்40, சண்முகவேல்44 இருவரும் ஆஜராகினர்.
ராமேஸ்வரம் போலீசார் கோவை சென்று இருவரையும் கைது செய்து அழைத்து வந்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், நவ.,20ல் போதையில் இருந்த இருவரும் வேறு ஒருநபரைகொலை செய்ய திட்டமிட்ட நிலையில், அடையாளம் தெரியாமல் மனோஜை குத்தி கொலை செய்ததாக தெரியவந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE