ராமநாதபுரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயலிழந்துள்ளது. ஓராண்டிற்கும் மேலாக கழிவு நீர் சாலைகளில் ஆறாக ஓடுவதாலும், குடியிருப்புகளில் புகுவதாலும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
காட்டுப்பிள்ளையார் கோவில் தெரு, அய்யப்பன் கோவில், மகர்நோன்பு பொட்டல், தாயுமானவர் கோயில் பகுதி, வசந்தா நகர், அரண்மனை மார்க்கெட், சிவன்கோவில் தெரு உள்ளிட்ட நகராட்சியின் பெரும்பாலான பகுதிகளில் பாதாள சாக்கடை நீர் தெருக்களில் பாய்வது தொடர்கிறது.
பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்படுவதாலும், முறையாக பம்பிங் செய்யாததும்,மழைநீரை பாதாள சாக்கடையில் விடுவதாலும் இதுபோன்ற நிலை அடிக்கடி ஏற்படுகிறது. மக்கள் சுகாதார சீர்கேட்டில் தவிக்கின்றனர். தொற்று நோய் அபாயம் உள்ளது.பாதாள சாக்கடை திட்டத்தை மேம்படுத்த நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சியில் பெருகி வரும் குடியிருப்புகளுக்கு ஏற்ப திட்டத்தை மறு மதிப்பீடு செய்து புதிதாக குழாய்கள் அமைத்து சீரமைக்க வேண்டும்.
சமீபத்தில் இதுகுறித்து ஆய்வு செய்த கலெக்டர்தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். மாவட்ட தலைநகரான ராமநாதபுரத்தில் மக்களின் சுகாதாரம் பாதுகாக்க அவசர நடவடிக்கை தேவை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE