ராமநாதபுரம்: வீட்டில் கோபித்துக்கொண்டு ராமநாதபுரத்தில் சுற்றிய தேவகோட்டை சிறுவன் உட்பட இருவரை போலீசார் மீட்டனர்.
ராமநாதபுரம் மகளிர் போலீஸ் மாலதி புதிய பஸ் நிலைய வளாகத்தில்ரோந்து சென்றார். அப்போது இரண்டு சிறுவர்கள் அங்கு நின்றனர். அவர்களை அழைத்து விசாரித்தார்.ஆதங்கொத்தங்குடி காசிராஜா மகன் கனிஷ்கர்14, தேவகோட்டை உடையாச்சி சண்முகம் மகன் விஜய் 10, என தெரிந்தது.உறவினரான இருவரும்வீட்டில் இருந்து கோபித்துக் கொண்டு வந்ததாக தெரிவித்தனர்.இருவரையும் இன்ஸ்பெக்டர் ஆனந்தியிடம் ஒப்படைத்தார். இருவரின் பெற்றோரை அழைத்து சிறுவர்களுக்கு அறிவுரை கூறி ஒப்படைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE