லாகூர் : பாகிஸ்தானில், பஸ் மீது மோதிய வேன் தீப்பிடித்து எரிந்ததால், 13 பேர், உடல் கருகி பலியாயினர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் நாரங் மண்டியில், நேற்று பனி மூட்டம் அதிகமாக இருந்தது. இதனால், சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல், டிரைவர்கள் அவதிப்பட்டனர். இந்நிலையில், எதிரெதிரே வந்த பஸ்சும், வேனும் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில், தீப்பற்றிய வேன் முழுதும் எரிந்ததால், அதிலிருந்த, 13 பேர், உடல் கருகி பலியாயினர்; 17 பேர் காயமடைந்தனர். அங்கு விரைந்த மீட்பு படையினர், இடிபாடுகளுக்குள் சிக்கிக்கிடந்தோரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக, டாக்டர்கள் கூறியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE