திருப்புல்லாணி : மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்தின் சார்பில் 100 நாள் வேலைத்திட்டப் பதிவேடுகளை பராமரிக்கும் ஊராட்சிச்செயலாளர்களுக்கு ரூ.ஆயிரம் வீதம் மாதந்தோறும் ஊக்கதொகை வழங்கப்பட்டு வந்தது.
2 வருடங்களாகரூ.ஆயிரம் வழங்கப்பட்டதுநிறுத்தப்பட்டுள்ளது. ஊக்கத் தொகையை மீண்டும் வழங்கிட ஊராட்சி செயலர்கள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்புல்லாணி ஊராட்சி செயலர்கள் சங்க ஒன்றியத்தலைவர் ஜெயபால் கூறியதாவது:100 நாள் வேலைத்திட்டத்திற்கு 9 வகையானபணிப் பதிவேடுகள், ஆவணங்களை பராமரித்து, அரசு அதிகாரிகளுக்கு அனுப்பி வருகிறோம். சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ. ஆயிரம் வீதம் ஊராட்சி செயலாளர்களின் மாத ஊதியத்தில் வரவு வைக்கப்பட்டது.2018 முதல் தற்போது வரை ஊக்கத்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு, மீண்டும் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE