காரைக்குடி : தேசிய அளவிலான அபாகஸ் போட்டியில் காரைக்குடி பிரிலியண்ட் அகாடமி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
தேசிய அளவிலான அபாகஸ் போட்டி இ&சி மாஸ் அகாடமி சார்பில்சென்னையில் நடந்தது.இதில் காரைக்குடி பிரிலியண்ட் அகாடமி மாணவர்கள் பரத்வாஜ், மதலேன்மேரி டெல்பின்சாம்பியன் பட்டம் பெற்றனர்.மாணவர்கள் இன்பென்ட் விக்டர், அஸ்வன்த், ரோகின்த் முதல் பரிசையும், ஜாவின் கிளாடியா, ஸ்ரீராம், கவித்ரா விஜி இரண்டாம் பரிசையும், ப்ரியன், நிஷா, ராமநாதன், பவதாரணி, பிபியா செரின் மூன்றாம் பரிசையும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரிலியண்ட் அகாடமி முன்னாள் மாணவர் டாக்டர் எம்.முரளி கிருஷ்ணா, அகாடமி இயக்குனர் நீலாவதி பரிசுகளை வழங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE