கோவை:வயது வந்தோர் புதிய கல்வி திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில், 12 ஆயிரத்து 188 பேருக்கு, அடிப்படை எழுத்தறிவு வழங்கப்படவுள்ளது.'கற்போம், எழுதுவோம்' என்ற வயது வந்தோர் கல்வி திட்டத்தின் கீழ்,15 வயதுக்கு மேல் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு, அடிப்படை எழுத்தறிவு வழங்கப்பட உள்ளது. கோவை மாவட்டத்தில், 688 மையங்களில் கற்போம், எழுதுவோம் மையங்கள் துவங்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு மையத்திற்கும், ஒரு தன்னார்வலர் வீதம், 688 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மையங்களில், எழுத, படிக்க தெரியாத, 12 ஆயிரத்து 188 பேர் கற்பிக்கப்படவுள்ளனர். ஒரு நாளைக்கு, 2 மணி நேர பயிற்சி வீதம், நேற்று முதல் வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.அனைத்து மையங்களையும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE