கோவை:கொலை வழக்கில் ஆஜராகாத நபரை, போலீசார் கைது செய்தனர்.கோவை ஒண்டிபுதுாரை சேர்ந்தவர் சிட்டிபாபு, 43; கூலித்தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கார்பென்டர் சக்திவேல், 24 என்பவருக்கும் இடையே கடந்த, 2018ம் ஆண்டு ஏப்., மாதம் ஏற்பட்ட தகராறில், சக்திவேல், சிட்டி பாபுவை இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்தார். சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து, சக்திவேலை கைது செய்தனர்.இவ்வழக்கில், சக்திவேலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. சேலத்துக்கு சென்ற சக்திவேல், கோவை கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் இருந்து வந்தார். இதையடுத்து, அவருக்கு பிடிவாரண்ட் வழங்கப்பட்டது. சிங்காநல்லுார் போலீசார் சேலத்தில் இருந்த சக்திவேலை பிடித்து, கோவை அழைத்து வந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE