திருப்பூர்:பள்ளி மாணவர்களுக்கான, 'கலா உற்சவ்' கலைப்போட்டி அறிவிப்பை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.இடைநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கவும், பாரம்பரிய கலைகளை உயிர்ப்புடன் வைத்திருக்கவும், கல்வித்துறை சார்பில், 'கலா உற்சவ்' போட்டிகள் மாவட்ட மற்றும் தேசிய அளவில் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் நடப்பாண்டுக்கான போட்டிகளை ஆன்லைனில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.வாய்ப்பாட்டு, இசைக்கருவி, பாரம்பரிய நாட்டுப்புற வகை நடனம், உள்ளூர் தொன்மையான பொம்மைகள் விளையாட்டுகள், இருபரிமாணம் மற்றும் முப்பரிமாண காண்கலை ஓவியங்கள், கைவினைப்பொருட்கள் என பல தலைப்புகளின் கீழ் நடக்கிறது.அரசு மற்றும் உதவி பெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும், 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் பங்கேற்கலாம். இப்போட்டிகள் முதலில் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு, 9 மாணவர், 9 மாணவியர் வீதம் தேர்வு செய்யப்படுவர். பின் மாநில அளவில் நடத்தப்பட்டு தேசிய அளவில் போட்டிகள் நடத்தப்படும். ஆர்வமுள்ளோர் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ளலாம் என கல்வித்துறை அறிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE