திருப்பூர்:திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில். இதுவரை, 5750 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, 5000க்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர்.திருப்பூர், அரசு மருத்துவ கல்லுாரியில், இதுவரை, 5750 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 3920 பேர், பி.சி.ஆர்., பரிசோதனை வாயிலாக கண்டறியப்பட்ட பாசிட்டிவ் நோயாளிகள். அதேபோல், 1800 பேர், பி.சி.ஆர்., பரிசோதனையில் நெகட்டிவ் என தெரியவந்தும், நோய் தொற்று அறிகுறியுடன் சிகிச்சை பெற்றவர்கள்.அவ்வகையில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை, 106 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இவர்களில், 2,230 பேர், 10 நாட்கள்; 1,630 பேர், 10 முதல், 20 நாட்கள்; 80 பேர், 20 முதல், 30 நாட்கள்; 6 பேர், 30 முதல் 40 நாட்கள் வரை, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுள்ளனர்.மருத்துவ கல்லுாரி டீன் வள்ளி கூறுகையில், ''டாக்டர் பாரதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு, கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டது. குறிப்பாக, சுவாசத்திறன், 30 முதல் 40 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால், அவர்களை குணமடையச் செய்வது மிகவும் கஷ்டம்.இருப்பினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 20 முதல், 30 நோயாளிகள், 40 முதல் 50 சதவீத அளவிலான சுவாசத்திறனில் அனுமதிக்கப்பட்டபோது, ஆக்சிஜன் உதவியுடன் காப்பாற்றப்பட்டுள்ளனர்,'' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE